Categories: Latest News TA

இலங்கைக்கான இஸ்ரேல் தூதர் திரு. ரூவன் ஜேவியர் அசார் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கௌரவ திரு. ஆனந்த விஜேபால ஆகியோர் இடையே ஒரு கலந்துரையாடல் 2025.05.18 ம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது .
அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இலங்கை அரசாங்கம் செயல்படுத்தி வரும் திட்டங்களை தூதர் பாராட்டியதோடு சர்வதேச விவகாரங்களில் இலங்கை அரசுடன் ஒத்துழைக்க இஸ்ரேல் அரசாங்கம் மிகவும் விருப்பத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகத்தின் செயலாளர் திரு. ரவி செனவிரத்ன அவர்களும் கலந்து கொண்டார்

Off