இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மாண்புமிகு மசூத் இமாத் அவர்கள், 2025 ஜூன் 20 அன்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு. ரவி செனவிரத்னவை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சில் சந்தித்தார்.
இதன்போது, இலங்கைக்கு வரும் மாலைதீவு நாட்டவர்களுக்கு விசா வழங்குவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் உள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் குழுவினர், இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Off